ஆடும் திருவடி தெரிகிறது
ஆனந்தம் அலைபோல் எழுகிறது
பாடும் திருமுறை ஒலிக்கிறது
பரமனின் திருவருள் இனிக்கிறது

ராவணன் தோள்களில் பதிந்தபதம்
ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம்
ஆரூர் வீதியில் நடந்த பதம்
ஆடிய பாதமே சாசுவதம்

தீயென எழுந்தது திருமேனி
தாமரைப் பதந்தனில் இவன்தேனீ
தாயென்றும் வருவான் சிவஞானி
தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ

காலனை உதைத்தது சிவபதமே
காசியில் நடந்ததும் சிவபதமே
மூலமும் முடிவும் சிவபதமே
முக்தி தருவதும் சிவபதமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *