என்றோ ஒரு நாள்…
காற்றில் மிதக்கிற பஞ்சுப் பொதியாய்
ஆகிற இதயம் அற்புதம் நிகழ்த்தும்.
போர்களைத் தடுக்குமென் பாடல்கள் அனைத்தும்
பூமி முழுவதும் பூக்களை மலர்த்தும்.
வார்த்தைகள் கடந்த வெளியினை நோக்கிக்
காலம் எனது கவிதையை நகர்த்தும்.
மூத்து முதிர்ந்து வருகிற மௌனம்
மனதிலிருக்கிற காயங்கள் உலர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *