ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா
ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா
வெளியேறி நாம்காண வானமுண்டு
வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு

கருவங்கள் கண்டாலும் காணாமலே
கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே
பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா
பகையின்றி நடையேகல் நலமல்லவா

காற்றோடு நான்சொன்ன கதையெத்தனை
கண்ணார நான்பார்த்த வகையெத்தனை
நேற்றோடு கிரணங்கள் நீங்கட்டுமே
நிலவிங்கு தன்பாதை நடக்கட்டுமே

சுயமாக அகல்கொண்டு சுடரேற்றலாம்
சுகமான நினைவோடு வழிபோகலாம்
தயவென்ன பயமென்ன இனிநிம்மதி
தயக்கங்கள் தீரத்தான் குருசந்நிதி

மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *