தாடிகளை நம்புவதே தேசத்துக்கு நல்லது
மூடிவைத்துப் பேசவில்லை;மனம்திறந்து சொல்வது
பாடினதார் திருக்குறளை? படத்தைநல்லாப் பாருங்க
பாரதத்தின் நாட்டுப்பண்ணைப் படைத்தவர்யார் கூறுங்க

குறுந்தாடி வளர்த்தவங்க கம்யூனிசம் வளர்த்தாங்க
கைத்தடியும் எடுத்தவங்க பகுத்தறிவை வளர்த்தாங்க
வெறுந்தாடி வளர்த்தவங்க வருத்தமுன்னு சொன்னாங்க
வளரச்சொல்லி விட்டவங்க பரமஹம்சர் ஆனாங்க

வெள்ளியலை தாடிக்காரர் யோக நெறி தந்தாங்க
உள்ளம் அலை பாயாம வாழவழி சொன்னாங்க
டெல்லியில தாடிக்காரர் தலைவருன்னு சொல்றாங்க
உள்ளவரும் தாடியோட  உலவுறதைப் பாருங்க

நாட்டுக்குள்ளே ஒண்ணுரெண்டு தாடி தப்பாப் போகலாம்
வீட்டுக்குள்ளே அண்ணந்தம்பி தாடிமீசை ஆகலாம்
காட்டிலுள்ள சிங்கத்துக்கு பிடரிதாடி ஆகும்ங்க
ஓட்டு கேக்கும் சிங்கத்துக்கு தாடியுண்டா பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *