நான்காம் திருமுறை உரை

ஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது என்று நினைத்து பாம்பு பயந்துவிட்டது. அப்போது உமையம்மை பார்த்து பயந்து இப்படி விலக, பாம்பு பயந்து இப்படி விலக, பாம்பு இங்கே வந்ததும் பெருமான் சடாபாரத்தில் இருக்கிற நிலவுக்குப் பயம் வந்துவிட்டது. தன்னை விழுங்க பாம்பு வந்துவிட்டது என்று. கடவுள் பக்கத்திலேயே இருந்தாலும் மனிதனுக்குப் பயம் வரும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம். மனநல மருத்துவர் வந்திருக்கிறார். மனதில் பயம் வந்தால், அவ்வளவு சீக்கிரம் போய்விடாது.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே

இவை மூன்றும் பயந்ததாம். இதைப் பார்த்து சிவபெருமான் என்ன செய்தார். என் பக்கத்தில் இருக்கும் போதே மூன்று பேரும் இப்படி பயப்படுகிறீர்களே என்று விழுந்து விழுந்து சிரித்தார். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்று கவிதையில் எப்படி எழுதுவார்கள்-? அந்த சவாலை திருநாவுகரசர் எடுத்துக்கொள்கிறார்.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.
என்கிறார்.

இதை கதையை திருவாரூரில் சொல்கிறார். இதில் இன்னொன்று என்னவென்றால் பாம்பை பார்த்து தன்னைக் கடிக்க வருகிறது என்று நிலா பயந்தது. அதை விரிவுபடுத்தி திருவாரூரில் இதே கதைக்குச் சொல்கிறார். நிலா பயந்து சிவபெருமானுடைய யானை தும்பிக்கைக்கு பக்கத்தில் போய் மறைந்து கொண்டது. ஒரு துளி நிலா வெளியில் தெரிய மின்னல் என்று நினைத்து பாம்பு பயந்தது. நிலாவைப் பார்த்து பாம்பு பயப்பட, பாம்பைப் பார்த்து நிலா பயப்பட, பாம்பைப் பார்த்து உமா பயப்பட, உமாவைப் பார்த்து பாம்பு பயப்பட தன்னைச் சுற்றி மனம் என்கின்ற ஒன்றை கட்டுப்படுத்தாவிட்டால் கைக்குள்ளே கடவுள் இருந்தாலும் மனிதன் பயந்து சாவான் என்று இது நமக்கு உணர்த்துகிறது. இந்த அச்சம் வரக்கூடாது.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

மேலைநாட்டு பயிற்சியாளர் வந்தால் 2000ரூபாய் கொடுத்து நாம் வகுப்புக்கு போய் உட்காருகிறோம். பயிற்சியாளர் Passtive attitude என்று சொல்வார். இதை அவர் அன்றே சொல்லிவிட்டார், இன்பமே என்நாளும் துன்பமில்லை. எனவே நாவுக்கரசர் பெருமான் உளவியல் சார்ந்தும் பல புதுமைகளை செய்து இருக்கிறார்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *