இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது?

-ஆ.ரேவதி, தாரமங்கலம்.
திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

கேளிக்கைத் தன்மை மிகுதியாக இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இதே சூழலில்தான், கருத்தியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களும் வருகின்றன.

கோடிக்கணக்கில் ரூபாய்கள் புழங்கும் துறை திரைத்துறை. எனவே மொத்தமும் சிதைந்து விட்டது என்று சொல்வதும் மிகை. முழுவதும் தலை நிமிர்ந்துவிட்டது என்பதும் பிழை.

வணிகரீதியான பாதுகாப்பில் செலுத்தும் அதே கவனத்தை சமூகப் பொறுப்புணர்விலும் இன்னும் அதிகமாகக் காட்டினால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *