எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும்
புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த
இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும்
அம்மையப்பனையே காண்கிறார்கள்.

குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது.
செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும்
உடல் குறுகி பணிவு காட்டும் அடியார்கள் மந்திரங்கள் உச்சரித்த
வண்ணம் வலம் வருவது போல்,வண்டுகள் பொய்கையை
சூழ்கின்றன.

சிவசக்தியின் பெருங்கருணையே பொய்கையாய் பெருகி நிற்க,
அந்தக் கருணையின் பெருக்கில் திளைத்தாடி,அணிகலன்கள் தாண்டி,
உடலையும் தாண்டி உள்நிலையில் ஊடுருவும் திருவருளில்
திளைப்போம் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும்.

வண்டுகளின் ஒலி பீஜ மந்திரத்தை ஒத்ததாய் இருக்கும்.மந்திர
உபதேசம் பெற்றவர்கள் மந்திரங்களை உச்சரித்த வண்ணம் வழிபாடு
நிகழ்த்தி,அதன் வழி வினை நீக்கம் பெறுகின்றனர் என்பது உணர்த்தப்
படுகிறது.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *