நெய்வேலி ஈஷா அன்பர்களின் அன்புமிக்க ஏற்பாட்டில் ஞானத்தின் பிரம்மாண்டம் நூல் விளக்கவுரை நிகழ்த்தினேன். ஒருமணிநேர உரையின் நிறைவில் ஒரு மனிதனின் வாழ்வில் குரு நுழைவதற்கு முன்பும் பின்பும் தெளிவு நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இப்படிச் சொன்னேன்…

“உங்கள் அறைக்குள்ளேயே இருட்டில் நுழைகிறீர்கள். எது எங்கே இருக்குமென்று தெரியும் என்றாலும் எடுக்க வேண்டியதை எடுக்க நேராகப் போய் நேராக வர முடிவதில்லை.தட்டுத் தடுமாற வேண்டி வருகிறது.

ஆனால் விசையைத் தட்டி வெளிச்சம் அறை முழுவதும் பரவினால் கவலையே இல்லை. எது எங்கே இருக்கிறதென்று தெரிகிறது.  குரு வரும்வரை பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இருட்டறைக்குள் நுழைந்ததைப் போல்தான் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கைதான் என்றாலும் அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

ஒரு குரு வந்தபிறகு சொந்த அறையில் வெளிச்சம் பரவுவதுபோல் உங்களுக்குள்ளேயே தெளிவு பரவுகிறது. விசையைத் தட்டியதும் வருகிற வெளிச்சம்எல்லாவற்றையும் தெளிவாக துல்லியமாகக் காட்டித் தருவது போல் குருவின் கருணை திடமான தீர்க்கமான முடிவுகள் எடுக்க உதவுகிறது.”

ஒரு சிறு இடைவெளி விட்டுச் சொன்னேன். “நெய்வேலியில்தான் இந்த உதாரணத்தைச் சொல்ல முடியும்.இங்குதான் மின்வெட்டே கிடையாதே! தமிழகத்தின் மற்ற  ஊர்களில் விசையைத் தட்டினால் வெளிச்சம் வரும்” என்று சொன்னால் சிரிக்கிறார்கள் “போங்க சார்! எந்த காலத்திலே இருக்கீங்க!” என்றதும் மின்சாரச் சிரிப்பு சிரித்தார்கள் நெய்வேலிக்காரர்கள்

நிகழ்வின் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *