ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம்
ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம்
ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத்
தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம்
யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த
தேகமென்றால் என்னவென்று சொன்னவன்
ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த
ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன்
சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட
சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம்
 பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப்
பரமனுக்கும் இங்குவரச் சம்மதம்
சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும்
பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன்
வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் – நாம்
வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன்
கண்ணெதிரே கடவுள்வந்த சாகசம்- அதைக்
காட்டுவிக்கும் கருணைவேறு யார்வசம்?
எண்ண எண்ண விந்தை அந்த அற்புதம்-என்றும்
இன்பம் இன்பம் சத்குருவின் பொற்பதம்

Comments

  1. வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் – நாம்
    வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன்//

    குருவே ச‌ர‌ண‌ம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *