நிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை
நிஜம்தேடி வந்தபின்னும் நிழல்சூழ்ந்தது
மழைதேடி வந்தபின்னும் செடிகாயுமோ-என்
மாதேவனடிசேர்ந்தால் இருள்சேருமோ

பகட்டான பந்தல்கள் நிழலல்லவே-அதில்
பலநூறு ஓட்டைகள் சுகமல்லவே
திகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன்
திசைசேர்ந்த பின்னால்தான் நான்தூங்கினேன்

ஒளிவீசும் இருள்நின்ற ஒய்யாரமும் -அது
ஒன்றேதான் கிழக்கென்னும் வியாபாரமும்
வெளிவந்த பின்னாலே வலியெத்தனை-நான்
விழிமூடமுடியாத இரவெத்தனை

குருவென்னும் அருள்ரூபம் கைதந்தது- அதன்
கனிவான கழலின்கீழ் நிழல்தந்தது
உருவான மௌனத்தில் உயிர்வாழ்ந்தது- பலர்
உணராத ஆனந்த அலைபாய்ந்தது

மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *