உடல்சூட்டில் புயலடித்து மழைபொழிந்து போகும்
கடல்சூட்டில் கதகதப்பாய் கட்டுமரம் வேகும்
மடல்சூட்டில் ரோஜாவின் முன்னிதழ்கள் வாடும்
தொடும்சூட்டில் தீப்பிடிக்கும் தண்ணிலவுக் காலம்

யாரிட்ட விறகினிலோ யாகத்தின் நெருப்பு
வேர்விட்ட மௌனங்கள் விளைகின்ற தகிப்பு
போரிட்ட காயத்தில் பூப்பூத்த சிலிர்ப்பு
கார்தொட்ட பெருமழையில் கொடிமின்னல் சிரிப்பு
பேச்சுரைத்த அமளியிலே பித்துச்சொல் முளைக்கும்
மூச்சிரைத்த உச்சத்தில் முக்திகொண்டு களைக்கும்
வீழ்ச்சியெது?வெற்றியெது?விளங்காமல் தவிக்கும்
காட்சியெலாம் தொலைந்துவிட  காலமங்கே உயிர்க்கும்
நான்தீண்டும் இடமெல்லாம் நதிநெளிந்த குளுமை
வான்தீண்டும் முகில்முதுகாய் வாஞ்சைகொண்ட புதுமை
கான்தீண்டும் நிலவொளியாய் குறுகுறுத்த  இளமை
நீதீண்டும் நொடியில்தான் நிகழுமந்த முழுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *