இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான்

ஈஷாவில் இருக்கின்ற மாயம்

நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு

நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம்

சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட

சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும்

கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே

குன்றின்கீழ் ஒளிர்கின்ற கூடம்
வார்த்துவைத்த மாதிரிகள் வாழ்க்கையினை ஆக்ரமிக்க
வாட்டத்தின் வலிகனிந்த பிறகு
பார்த்துவந்த மானிடர்கள் சேர்த்தளித்த சுமையிறக்க
பரமநிழல்தேடுகிற பொழுது
தீர்த்தத்தில் தலைமுழுகி தீர்ப்புக்குத் தலைவணங்கி
திரும்புகையில் முளைக்குமிரு சிறகு
வேர்த்தநடை தகிப்பாற வேண்டிநின்ற கனல்மேவ
வைத்திருந்த அகந்தையெலாம் விறகு
கைநிறைய வேம்புதரும் பைரவியின் பார்வையிலே
கண்கலங்கி நின்றிருக்கும் தருணம்
பொய்மனதின் கூச்சலெலாம் போயடங்க தியானலிங்கப்
பெருமௌனம் பருகுகிற தருணம்
வையகத்தில் வாழ்ந்தபடி வேறுநிலை எய்தும்படி

வித்தகனார்  ஆக்கிவைத்த தருணம்

நைந்தநிலை மாற்றிமிக நன்மையெல்லாம் கூட்டுகிற
நாயகனார் திருவடிகள் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *