இன்னொரு மனிதன் எழுதிய சீலையில்
உன் தூரிகையை ஓட்டலாகாது;
மௌனம் பரப்பிய மேடையில் ஏறி
யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ;
புராதனசிலைகளின் பக்கவாட்டில்
கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு?
நீவிழிக் கும் வரை நிதானித் ததன்பின்
சூரியன் உதிப்பதாய் சொல்லித் திரிகிறாய்
விழுமுன் நிழலில் வண்ணங்கள் நூறு
அழகாய்த் தெரிவதாய் அளந்து விடுகிறாய்
விக்ரமாதித்தர்கள் முதுகினில் எல்லாம்
வலியத் தொற்றும் வேதாளம் நீ
வையமே உன்னை விரும்பிச் சுமப்பதாய்
பொய்யும் புரட்டும் பரப்பி நடக்கிறாய்
ஆறாம் வேதமும் எட்டாவது சுரமும்
நானே என்கிறாய்; நம்புகி றார்சிலர்
உன்னை உனக்கே நன்கு புரியும்
நன்னாள் எதுவோ?யாருக்குத் தெரியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *