வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் நோக்கமே, அவற்றின் நிபந்தனையில்லாத நேசத்தை, நல்ல உணர்வுகளை, நம்பிக்கையை நன்றியை, நாம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான்.

உயிர்களிடையே பேதம் பார்க்காத பரந்த மனம் வளர்வது, செடிகள் வளர்ப்பதில் தொடங்கி, மீன்கள் வளர்ப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்று படிப்படியாக நீளும்.

மேலும் பரிவும் கனிவும் நிரம்பிய உள்ளம் உருவாக வழி மற்றஉயிர்களுடன் தொடர்பு படுத்திக் கொள்வதுதான்.

ஆனால் எவ்வளவு செல்ல பிராணிகள் சுற்றி இருந்தாலும் தங்கள் தன்மையில் மாறாமல் இருப்பவர்கள், அநேகமாக அந்தப் பிராணிகளை தாவரங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

எளிய உயிர்கள் கூட பெரிய விஷயங்களை நமக்கு உணர்த்தி வரும். அப்படி உணர்த்தியும் உணராதவர்கள் வீட்டு வாயில்கலில் மேற்கண்ட அறிவிப்புப் பலகை தொங்கினாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *