தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில்
ஆதி குருவின் அருளாலே-யாதுமாய்
தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும்
பொன்னாய் மிளிர்ந்த பொழுது.

பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே
ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும்
புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய
அனலாய் எழுந்த அருள்.

பேசா மவுனத்தில் பேரருளின் அற்புதத்தில்
ஈஷா உதயத்தின் இன்பநாள்- நேசத்தால்
மானுடத்தைக் காக்கும் மகத்துவம் பொங்கவே
வானிறங்கி வந்த வகை.

சத்குரு என்றதுமே சட்டென்று கண்கலங்கி
பக்தி பெருகுகிற பாங்கெல்லாம்-சக்தி
வடிவாக வந்தவரின் வற்றாத அன்பு
நடமாடும் தெய்வ நிலை.

ஆன குருவடிவே ஆதி சிவவடிவாம்
ஞானமறை நூல்கள் நவிலுமே-வானகமே
மண்ணில் இறங்கிய மாண்பின் வடிவன்றோ
கண்ணில் தெரியும் குரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *