கல்லைப் புரட்டி நிமிர்த்திய நொடியில்
கூரிய முனைகள் குத்தியிருக்கும்.
சில்லுகள் பட்டு விரல் கிழிந்திருக்கும்
சிற்றுளி அழுத்தியே கை சிவந்திருக்கும்;
கண்களில் கூடக் கல் தெறித்திருக்ம்
கால்களில் பொடித்துகள் நரநரத்திருக்கும்.
இரவுநேரக் கனவுகள் முழுவதும்
அசுரக் கற்கள் ஆக்ரமித்திருக்கும்.
உணர்விலும், புணர்விலும், ஒவ்வொரு நொடியிலும்
சிலையின் கருப்பையாய், மனமிருந்திருக்கும்.
சிற்பந்தொட்டு வருடிப் பார்த்ததில்…
சிற்பியின் அவஸ்தைகள் உறுத்தின எனக்கு.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *