(ஈஷாவின் உணவரங்கமான பிக்‌ஷா ஹாலில் உருவான பாடல்)
எனது தந்தை சோறிடுவான்

என் சிரசில் நீறிடுவான்

என்மனதில் வேர்விடுவான்

என்னுடனே அவன் வருவான்

காலங்களோ அவனின்புஜம்

கவிதைகளோ அவனின் நிஜம்

தூலமிது அவனின் வரம்

தொடர்ந்து வரும் குருவின் முகம்

ஆடும்மனம் ஓய்ந்தபின்னே

ஆணவமும் சாய்ந்தபின்னே

தேடுமிடம் குருநிழலே

தேடிவரும் அவன்கழலே

தேம்புவது தெரியாதா

தேவையென்ன புரியாதா

சாம்பலிது உயிர்க்காதா

சேர்த்துகொள்வாய் குருநாதா

வைகறையின் வெளிச்சமவன்

வெண்ணிலவின் குளிர்ச்சியவன்

கைகளிலே அனிச்சமவன்

கருணையெனும் சுபிட்சமவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *