வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

ஆணவத்துடன் இருப்பவர்களைக் கூட ஒருவகையில் சகித்துக் கொள்ள முடியும். அடக்கத்துடன் இருப்பதைப்போல பாவனை புரிபவர்களின் போலித்தனம் பொறுக்கவே முடியாது.

“பெருக்கத்து வேண்டும் பணிவு” என்றார் திருவள்ளுவர். ஒரு மனிதனிடம் எதுவுமே இல்லையென்றாலும் உண்மையான பணிவு இருந்தால் எல்லாமே வந்துவிடும். அதே நேரம் ஒருவர் பணிவு காட்டுவதில் போலித்தனம் காட்டினால் அவர் எவ்விதத்திலும் நம்பகமானவர் அல்ல.

“இவ்வளவு பெரிய மனிதர் பணிவாக இருக்கிறாரே” என்று பெயர் வாங்க சிலர் அடக்கமாய் இருப்பது போல் நடிப்பதும், அந்த வேளையில் அவர்களின் அகங்காரம் துருத்திக் கொண்டிருப்பதும் மிகவும் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கும்.

அன்பு, பரிவு, பணிவு இவற்றைஉள்ளே உணர்ந்து வெளிப்படுத்துங்கள். உங்கள் மீதான நம்பிக்கை பலமடங்கு பெருகுவதை உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *