அமெரிக்கா வாழ் அறிஞரும் ஆய்வாளருமான திரு.நா.கணேசன் திருமாலுக்கும் பழைய சோற்றுக்கும் உள்ள சிலேடைச்சிந்தனைகளை புதுப்பித்தார்.

சோறு என்றால் முக்தி என்றொரு பொருளும் உள்ளது நினைவுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இந்த வெண்பாக்களை எழுதினேன்

மாவடு ஊறவே மாவலி சென்னியில்

சேவடி வைத்தவன், சேர்த்துப்பு-மேவாத

பாற்கடலில் ஊறும் பழையனவன், முக்தியாம்

சோற்றுக் குதவுவனோ சொல்

சாதம் பழையதொக்கும் சாரங்கா-வல்வினையின்

சேதம் பழையதடா சீர்மிக்க -பாதம்

பலதோஷம் தீர்க்கும் பழையதே யன்றோ

ஜலதோஷம் இல்லாத ஶ்ரீ

கொண்டதோ குள்ளவுரு கேட்டதோ மூன்றடி
அண்டங்கள் எல்லாம் அபகரித்தோன் -விண்டதோ
பண்டோர் இரணியனை பின்னர் சிவதனுசை

உண்டதோ அண்டவுருண் டை.

மொத்தப் பிரபஞ்சங்கள் முக்கி விழுங்கியவன்

சத்தமின்றி வெண்ணெயும் சேர்த்துண்டான் -வித்தகன்

வஞ்சமுலைப் பாலுண்டான் வஞ்சியாம் ராதையைக்

கொஞ்சி இதழுண்ணுங் கோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *