வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.

“யாரோ ஒருவரை நாம் சார்ந்திருக்கிறோம், அவர் தான் நமக்கு எல்லாம்” என்று எண்ணுவது வாழ்வின் மிகப்பெரிய புதிர். “யாரும் யாரை நம்பியும் இல்லை” என்பது வாழ்வின் மிகப்பெரிய தெளிவு.

அந்தப் புதிரைத் தவிர்த்துவிட்டு தெளிவை உணர்பவர்கள்தான் வாழ்க்கையில் உன்னதமான உயரங்களைத் தொடுகிறார்கள்.

துரோகங்கள் ஏற்படுத்திய வலிகளைத் தாங்கிக்கொண்டே பயணம் தொடர்பவர்கள், தங்களின் அந்த வலிமிகுந்த அனுபவங்களை பயணத்தின் துணைகள் என்பதை உணர்கிறார்கள்.

துரோகங்கள் என்பவை உங்களால் தனித்து முன்னேற முடியும் என்பதற்கான நினைவு மடல்கள்.

மற்றவர்களின் அனுபவங்களே நமக்கு படிப்பினைகள் ஆகுமென்றால், நம்முடைய சொந்த அனுபவங்கள் படிப்பினைகள் ஆகாதா என்ன??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *