indian_hindu_god_lord_durga_kali_gayathri_sakthi_lalithambigai_hanuman_skanda_tiger_image_high_resolution_desktop_wallpaper

வரும்பகை கடிவாள் வாராஹி – தினம்
வெற்றிகள் தருவாள் கருமாரி;
திருவடி தொழுதிட திரள்பவர் மனங்களின்
தயக்கங்கள் துடைப்பாள் ஶ்ரீகாளி!

ஆயுதம் ஏந்தும் திருக்கரமும் – நல்ல
அபயம் அளித்திடும் மலர்க்கரமும்
மாயையை விலக்கும் மூன்றாம் விழியும்
மிளிர்ந்திடப் பொலிவாள் மாசக்தி!

கண்களின் அசைவில் கலிநகரும் – அவள்
கைவளை ஓசையில் கடல்புரளும்
எண்ணிய காரியம் எட்டும் வீரியம்
எமக்கருள் செய்வாள் மாதேவி!

கருவினில் உறக்கம் கொடுப்பாளாம் – அதில்
கைகால் முளைத்திட வைப்பாளாம்
வருகிற பிறவிகள் தொடர்வதை நிறுத்திடும்
வித்தகி ஆயுளை வளர்ப்பாளாம்;

மந்திரம் எந்திரம் ஆசனமாம் – அவள்
மலரடி தருமருள் நூதனமாம்;
சிந்துரம் சிந்திடும் மங்கலை கண்களின்
செஞ்சுடர் கிழக்கின் காவியமாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *