(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன்.
அதைத் தமிழில் எழுத முயன்றேன்)

பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ

புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே

மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ

நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே

சாம்பசிவன்தலையிலேஏறும் மாயமென்னவோ-அட

நாகப்பாம்பே உனக்கிருக்கும் மேன்மை என்னவோ

உன்னிடத்தில் உள்ள்ள ஏதோ தன்மையைக் கண்டே-அட

பொன்னுடலில் ஆடிவர பரமன் அழைத்தான்

ஆபரணம் ஆக உன்னை அய்யன் அணிந்தான் -நீ

ஆசையுடன் அவன்தலைமேல் ஏறியமர்ந்தாய்

ஊர்ந்துபோகும் சின்னஞ்சிறு ஜீவனல்லவா-இந்த

உயர்ந்தநிலை அடைந்ததென்ன? சொல்ல நீயும்வா

சொல்லிவிடு சொல்லிவிடு நாகப்பாம்பே-அந்த

ஒன்றைமட்டும் சொல்லிவிடு நாகப்பாம்பே

ஈசனவன் நேசத்தினை எப்படிப் பெற்றாய்-நீ

என்ன என்ன குணங்களினால் இந்நிலை உற்றாய்

நீயுமந்த ரகசியங்கள் சொல்லிக் கொடுத்தால்

நானும்,அந்த ஈசனவன் அன்பைப் பெறுவேன்

ஆபரணமாய் சிவனும் என்னை அணிய வேண்டாம்-அவன்

பாதத்திலோர் தூசெனவே வாழ்ந்து கிடப்பேன்

மார்க்கமொன்று சொல்லிவிடு நாகப்பாம்பே-நீ

கேட்டதெல்லாம் ஆசையுடன் நானும் கொடுப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *