ஒன்று தொடங்கிப் பன்னிரண்டு வரையென்

எண்ணங்களையே எண்களாக்கினேன்.
வட்டம் ஒன்றினுள் வரிசையாய்ப் பொருத்தினேன்.
ராகு காலங்களை ரத்து செய்து
நல்ல நேரங்களை நிலை நிறுத்தினேன்.
கூரிய முனையில் பூக்கள் மலர்த்திய
பார்வையின் கனிவை முட்களாக்கினேன்.
இதயத்துடிப்பின் எதிரொலி போல
“டிக் டிக் டிக்”கெனும் தாள லயத்துடன்
“எல்லாக் கணங்களும் இனியவை” என்கிற
பாடலை மட்டும் பாடிக் கொண்டு…
உன்னுடைய மணிக்கட்டில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *