வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவை ஒரு நாள் வைத்திருந்தாலும், அது பழைய சோறாகி விடுகிறது.

நீங்கள் ரசித்து உருவாக்கிய கனவை நாளைக்காகவே வைத்திருந்தால், அதுவும் பழைய கனவாகி விடுகிறது.

உரிய வயதோ கல்வித் தகுதியோ இல்லாத காலத்தில் நோட்டுப்புத்தகத்தில் மயிலிறகு போல கனவுகளையும் நாம் பொத்திப் பொத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், வயதும் தகுதியும் வந்த பிறகு கனவுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவிலான நேரமும் தூரமும் நிச்சயம் குறையவேண்டும்.

நேற்றைய கனவின் மிச்சத்தை நாளை வரை வைத்திருக்காதீர்கள். இன்றே நடைமுறைப்படுத்தி வாருங்கள். நேற்றைய வேலையின் மிச்சத்தை இன்று வரைகூட வைத்திருக்காதீர்கள். உடனுக்குடன் முடித்து விடுங்கள்.

ஆறின கஞ்சி மட்டும் பழங்கஞ்சியல்ல. ஆறின கனவு, கடமைகள் எல்லாமே பழையவைதான்.

சின்னச் சின்ன செயல்களை சரியான நேரத்தில் சரியான விதத்தில் செய்வதைத்தான் சரித்திரம், சாதனை என்-று சொல்லிக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *