மகாகவி பாரதிக்கு முன்பும் சமகாலத்திலும் பாரதி பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் குறித்து உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டுப் பட்டியலை வழங்கியிருக்கிறார்.

1) திருவதிகைக் கலம்பகம் எழுதிய வேலாயுத பாரதி

2)திருவிளையாடல் நாடகம் எழுதிய கிருஷ்ண பாரதி

3)சூடாமணி நிகண்டு இயற்றிய ஈஸ்வர பாரதி

4)ஆத்திசூடி வெண்பா வடித்த இராம பாரதி

5) விஸ்வபுராணம் இயற்றிய முத்துச்சாமி பாரதி

6)திருத்தொண்டர் மாலை,தேசிகர் தோத்திரம் போன்ற நூல்கள்   தந்த புதுவை குமார பாரதி

7)கூடல் பதிகம் பாடிய குணங்குடி கோவிந்த பாரதி

8) கந்தபுராணக் கீர்த்தனை,வேங்கைக்கும்மி உள்ளிட்ட பல நூல்களைப் பாடிய பெருங்கரை குஞ்சர பாரதி

9)மதுரகவி பாரதி

10)கீர்த்தனைகள் பல தந்த கோபாலகிருஷ்ண பாரதி

11)பாரதியின் பால்ய நண்பர் பசுமலை சோமசுந்தர பாரதி

உவமைக்கவிஞரின் இந்தப் பட்டியல் அடங்கிய கவிதை அவர்தம் வழித்தோன்றல் கவிஞர் கல்லாடன் நடத்திவரும்

வள்ளுவர் தமிழ்ப்பீடம்  செப்டம்பர் 2013 இதழில் வெளியாகியுள்ளது.

தொடர்புக்கு:93808 34762

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *