வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
வாழ்க்கை என்று ஒன்று தனியாக இல்லை. அது சம்பவங்களால் ஆனது. சம்பவங்கள் என்பவையோ மனிதர்களால் வருவது. எனவே இந்த வாழ்க்கை புரிய வேண்டுமென்றால் அதற்கு மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மனிதர்கள் பல விதம் என்பதைப் புரிந்து கொள்வதே முதல் சூத்திரம். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ற எல்லைக்குள் வரவே வராதபோதும், அந்த எல்லைக்குள் கட்டுப்படாதபோதும் நீங்கள் ரசிக்காத சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஆனால் அந்தந்த மனிதர்களை அவரவர் நிலைகளில் வைத்தே புரிந்து கொள்கிறபோது, வாழ்க்கையின் விதம்விதமான வண்ணங்கள் நமக்கு விளங்குகின்றன. மனிதர்கள் எத்தனை பேர், எண்ணங்களின் பின்புலத்தில் உருவாவார்கள் என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.
உங்க எதிர்பார்ப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால் எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் ஒரு தனித்துளி. வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை உங்களுக்கு உணர்த்த வந்துள்ளார்கள்.
மனிதர்களை விருப்பு வெறுப்பின்றி உற்று கவனியுங்கள். வாழ்க்கையைவிட சுவாரசிமானது வேறேதும் இல்லை.