வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது?
-ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம்

வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் போகலாம்.

ஆனால் வேலை அனுபவங்கள் என்னும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறனை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். பல புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம்.

காலம் கனிகிறபோது, உங்களை முழுமையாய் மதிக்கும் இடத்தில் வேலை பெறுவராகவோ, அல்லது பத்துப்பேர்களுக்கு வேலை தருபவராகவோ நீங்கள் உயரலாம்.

சிலர், தங்கள் உண்மைத்தன்மையை நிரூபிக்க, நிர்வாகத்திடமோ சக பணியாளர்களிடமோ முரண்டுபிடிப்பார்கள். அதன்மூலம் இன்னும் பெயரைக் கெடுத்துக் கொள்வார்கள்.

மௌனமாகவே இருந்து, தம்மைத்தாமே மேம்படுத்திக்கொண்டு, தகுதிக்கேற்ற இடத்தை தேடிப் பிடித்து காலூன்றுபவர்கள் செயல்வீரர்களாகப் மிளிர்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *