தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?
– மீ.மணியன், வெண்ணந்தூர்

தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்னும் விதமாய் நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

முதலை ஆள்பவன் முதலாளி. தொழிலை ஆள்பவன் தொழிலாளி. எனவே, நீங்கள் குறிப்பிடும் “தகுதி இல்லாதவர்” என்பவர் முதலாளியாகவும் இருக்கலாம். மேலதிகாரியாகவும் இருக்கலாம்.

ஒருவருடைய தகுதியின்மையை நிரூபிக்கும் வழி, தன்னுடைய தகுதியைத் தானே நிலைநாட்டுவதுதான்.
எனக்குத் தெரிந்த ஒருவரை அவருடைய முதலாளி தேவையின்றி சந்தேகப்பட்டார். இவர் ராஜினாமா செய்யும்போது, குறிப்பிட்ட காரணம், “எனக்கு முதலாளியாக இருக்கும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்” என்பதுதான்.

அப்படி வெளியே வந்து, தொழில் தொடங்கி, பெரிய தொழிலதிபராக விளங்குகிறார்.
எனவே, பணி செய்யும் சூழல், தவிர்க்க முடியாததென்றால், மனக்கசப்பின்றி பணிபுரிந்து உங்கள் தகுதியை நிரூபியுங்கள்.

இது நீங்களாகத் தேர்வு செய்த விஷயம். எனவே, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைச் சூழலையும் மனதில் வைத்து முடிவெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *