இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்?

ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை.
வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல. நோய்களுக்கு தடுப்பூசி போட்டு வளர்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மனதில் தடுப்பூசி போடாமல் வளர்த்ததே காரணம்.

குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கையில், பண்பாட்டின் சிறந்த அம்சங்களை கதைகளாகவோ பழக்கங்களாகவோ அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டு இளைஞர்கள் ஆனபின் புலம்புவதில் பயனில்லை.

ஒழுக்கமான வாழ்வில் இருக்கும் வசதிகளை, வெற்றிகளைப் புகட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் உணவை ஊட்டுவதுபோலவே நயமாகவும் பயமாகவும் ஒழுக்க உணர்வை ஊட்டினால் சமூகத்தீமைகளில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

பெற்றோருடைய அன்பின் ஆளுமையும், குடும்பத்தில் நிலவும் பண்பாட்டுச் சூழலுமே தலைசிறந்த பண்புகளும் தலைமைப் பண்புகளும் கொண்ட குழந்தைகளை உருவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *