osho rajiv

 

 

 

 

 

 

 

 

 

ஓஷோ மீது நிகரில்லா பக்தி கொண்ட சேவகியாய் ஓஷோ ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாய் வாழ்ந்த லஷ்மியின் வாழ்வைச் சொல்லும் நூல் THE ONLY LIFE. பெரும் அவமானங்கள், கடும் நோய், கொடும் அடக்குமுறைகள் எனஎது நேர்ந்தாலும் “இது என் குருவின் கருணை” என ஏற்றுக் கொண்ட லஷ்மி,ஓஷோ ஆசிரமம் முதன்முதலுருவான காலங்களில் அதன் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டவர்.

பாரதத்தின் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் லஷ்மி. சஞ்சய் காந்தி இறந்த போது இந்திராவுக்கு ஆறுதல் சொல்லச் சென்று நீண்டநேரம் அங்கே இருந்திருக்கிறார். அப்போது இந்திரா காந்தி தன் இன்னொரு மகனைப் பற்றிச் சொல்லி, “விமானியாய் இருக்கும் அவனை பொதுவாழ்வுக்கு வருமாறு சொல்லி வருகிறேன். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். நீங்கள் பேசிப் பாருங்களேன்” என்று கேட்டிருக்கிறார்.லஷ்மியும் ராஜீவ் காந்தியை சந்தித்துப்பேசியிருக்கிறார்.

அப்போது மறுத்துரைத்தாலும் பின்னர் ராஜீவ் அரசியலில் நுழைந்தார்.

அதேபோல மொரார்ஜி பிரதமர் ஆவதற்கு முன்னால் அந்தப் பகுதியிலுள்ள சங்கராச்சாரியார் ஒருவர் அழைப்பின் பெயரில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.மொத்தம் பத்தொன்பது சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் ஓஷோவும் ஒருவர். அப்போது விழா மேடையில் சங்கராச்சாரியாருக்கு மட்டும் உயரமான ஆசனம் அமைக்கப்பட்டிருந்ததை மொரார்ஜி கண்டித்தாராம். உடனே ஓஷோ மொரார்ஜியிடம் “எங்கள் யாருக்கும் இதில் மறுப்பில்லை. உங்களுக்கு மட்டும் இது தவறாகத் தெரிய உங்கள் அகங்காரமே காரணம்” என்றாராம்.

மொரார்ஜி ஆட்சியில் ஓஷோ ஆசிரமம் பல சிரமங்களை சந்திக்க இந்த சம்பவமும் காரணமாக இருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் ரஷீத் மாக்ஸ்வெல்.

இந்நூலின் வழி நாமறியும் லஷ்மி குருபக்தியின் ஒளிவீசும் உயிராய்த் திகழ்கிறார், சைமன் &ஸ்க்யூஸ்டர் நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

http://www.simonandschuster.com/books/The-Only-Life/Rashid-Maxwell/9789386797056

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *