இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள்
இதயத்துக்குள் இல்லாமலில்லை.
எதிர்பாராத நொடிகளில் திடீரென
எழுகிற வலியை எழுதுவதெப்படி?
வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று
வந்து கொண்டே இருக்கிற போதும்
வீசிப்போன தென்றலின் நினைவு
வரும்போதெல்லாம் வருத்தத்தின் புழுக்கம்.
நேற்றைய உறவின் ஞாபகச் சுவட்டை
அலைகள் எதுவும் அழிக்கவேயில்லை.
கடற்கரைப் பரப்பாய் விரிந்த மனசில்
கடந்த காலத்தின் கிளிஞ்சல் குவியல்கள்.
காலியாகக் கிடப்பது தெரிந்தும்
கைகளில் எடுத்துத் திறக்கும்போது
முகத்தில் அறையப்போகும் வெறுமையைத்
தாங்கிக் கொள்ளத் தயாராகின்றேன்.
ஆறுதல் அடைய வேண்டியுள்ளது…
கிளிஞ்சல்களேனும் கிடப்பதைக் கண்டு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *