பிரளயம் எழுந்தே அடங்கும்
பிரபஞ்சம் புதிதாய்த் தொடங்கும்
நரக வலிகளும் முடங்கும்
வருகிற காலம் விளங்கும்

தீர்ப்பின் நிறங்கள் மாறும்
தீர்வை நோக்கிப் போகும்
போர்கள் முடிந்து மௌனம்
போதனை தேடும் இதயம்

மோதலின் சுவடுகள் மறையும்
மூர்க்கத் தனங்கள் குறையும்
ஆதலால் நம்புக நெஞ்சே
ஆதவக் கிரணம் தெரியும்

தவறுகள் திருத்தும் தருணம்
தலைவர்கள் திருந்தும் தருணம்
அவதிகள் மெதுவாய்க் குறையும்
அனைவர்க்கும் ஒருநாள் விடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *