பொய்யில்லாச் சிரிப்புடன்
கையுயர்த்தும் செவிலியின்
ஆதுரப் பார்வையில்
ஆயிரம் மருந்துகள்

வருகைப் பதிவேட்டில்
வளைக்கரம் உரச
புன்னகை எழுதிப்
போகிறாள் செவிலி

மருந்தின் அணைப்பில்
உறங்கும் சிறுவனின்
அணைப்பில் கிடக்கும்
கரடிப் பொம்மையை
சேர்த்து வருடும்
செவிலியின் விரல்களை
இறுகப் பற்றி
எழுந்தது சூரியன்.

அசூயை பொறுக்கும்
அருங்கலை பயிலவே
தானாய் காயம்
தருவித்துக் கொண்டு
மருத்துவமனையில்
செவிலிக்காக
வந்து சேர்கிறார்
வலியிலாக் கடவுள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *