திரிமீது ஒளிமேவும் தருணம்
திசையெட்டும் அழகாக ஒளிரும்
விரிகின்ற இதழ்போல சுடரும்
விரிவானின் விண்மீனாய் மிளிரும்

விழியோடு சுடரேந்தி வருக
வளைக்கைகள் அகலேந்தி வருக
எழிலான கோலங்கள் இடுக
எங்கெங்கும் ஆனந்தம் நிறைக

கதிர்வேலன் மயில்வந்து ஆட
கலைவாணி யாழ்மீட்டிப் பாட
மதிசூடும் திருவண்ணா மலையான்
முற்றத்தில் மூவுலகும் கூட

ஜகஜோதி யாய் மின்னும் இரவு
ஜகங்காக்கும் மஹாசக்தி வரவு
அகஜோதி அவளேற்றித் தருவாள்
அவளேநம் உயிரெங்கும் நிறைவாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *