சாயங்கால வெய்யிலாய் உன் முகம்

தூங்கச் செல்லும் சூரியன்போல.
அஸ்தமன நேரத்து அலுப்பிலும்கூட
இதமான வெளிச்சம் இருக்கவே செய்யும்.
எனினும்… அடடா ஏதுனக்கு ஓய்வு?
இன்னொரு பயணம் தொடங்கி விட்டாய் நீ.
இன்னோ ருலகின் சூரியனாக.
மேற்கு நோக்கிப் போகிற உனக்கு
நின்று பேசவும் நேரமிராது.
என்கிறபோதும் ஒரேயரு வார்த்தை
உனது வானமும் உனது கிழக்கும்
வழிபார்த்திருக்கும்… நீ வருகிறவரைக்கும்.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *