பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில்
திருப்பிப் போடத் தெரியவில்லை.
வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல்
தேர்வுகள் எழுதும் விபரமில்லை.
கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர
வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை.
பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும்
மூல சூத்திரம் மறக்கவேயில்லை.
சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தும்
சாமர்த்தியமே போதவில்லை.
முட்செடிகளுக்கு முகமூடிகளாகப்
பூக்கள் இருப்பது புலப்படவில்லை.
ஒவ்வொரு தடவையும் விளையாட்டுகளில்
ஒப்புக்காக சேர்க்கப்பட்டும்
ஒருமுறைகூட வேண்டா வெறுப்பாய்
விளையாடியதாக ஞாபகமில்லை.
இத்தனை இருந்தும் இந்த வாழ்க்கை
பிடித்திருப்பதுதான் புரியவேயில்லை.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *