வீணைநாதம் கேட்குதம்மா வெட்ட வெளியிலே
வெள்ளிச் சலங்கை குலுங்குதம்மா வானவெளியிலே
காணக் காண லஹரியம்மா உனது சந்நிதி
காதில்சேதி சொல்லுதம்மா கொஞ்சும் பைங்கிளி

ஆரவாரம் செய்யத்தானே அழகுராத்திரி
அன்னைமுன்னே ஒன்பதுநாள் ஆடும்ராத்திரி
பாரமெல்லாம் தீரத்தானே சக்தி சந்நிதி
பாதத்திலே போய்விழுந்தால் பெரிய நிம்மதி

வேப்பிலையும் இனிக்குதடி வேதநாயகி
வேண்டும்வரம் நீகொடுப்பாய் லிங்கபைரவி
காப்பதற்கு நீயிருக்க கவலை ஏதடி
காலகாலன் ஆசைவைக்கும் காதல்நாயகி

ஆதியோகி மேனியிலே பாதியானவள்
ஆலமுண்ட கண்டனுக்கு அமுதமானவள்
நீதியாகி ஜோதியாகிநிமிர்ந்து நின்றவள்
நீளும்வினை மாளும்படி சூலம்கொண்டவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *