சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும் நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள் சொல்லிப் பணிந்தால் சுகம். புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள் போடும் கணக்கின் பதிலீட்ட…

அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர் அழகியின் சிரிப்பொலி கேட்கிறது விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள் வண்ணத் திருமுகம் தெரிகிறது நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த நாயகி சரசம் நிகழ்கிறது வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள் விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது அறிதுயில்…

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப் பரமனின் நெற்றியை ஒற்றும் பச்சை வண்ணத் திருமேனி-எங்கள் பரமனின் பாதியைப் பற்றும் பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு பிள்ளை பூமியை சுற்றும் பச்சை மாமலை திருமாலோ-அவள் பிறந்த வகையின் சுற்றம்…

கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அதுகாமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாதுதட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்தேவதேவி குரல்தராமல் நிலையடங்காதுஅங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலேஅங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அடஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒருபார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலேகோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவகோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே சிந்துரத்தில்…

ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள் எண்திசை ஆண்டிருக்கும் மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள் மதுரத்தில் தோய்ந்திருக்கும் பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை புதுப்புது கலைவளர்க்கும் சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின் சந்நிதி தனில்கிடைக்கும் படைப்புக்…

காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. மோதிய அலைகளில் ஆடியபடியே பாதங்கள் படுமென ஏங்கியபடியே நாயகன் திருமுகம் தேடியபடியே தோழமை எனும்சொல் சூடியபடியே காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர்…

அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை உளறுதல் ஒருசுகமே பவவினை சுமைகளும் அவளது திருவிழி படப்பட சுடரெழுமே சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில் சிறுமியின் பரவசமே புவனமும் அவளது கருவினில் தினம்தினம் வளர்வது அதிசயமே…

மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள் மலேய நாட்டினிலே கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும் காவிய வீட்டினிலே நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும் நின்று ஜொலிக்கின்றாள்! சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில் சிரித்து நிறைகின்றாள்  …

தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில் ஆதி குருவின் அருளாலே-யாதுமாய் தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும் பொன்னாய் மிளிர்ந்த பொழுது. பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும் புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய…

21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் “மண்வாசனை” கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள்.…