ஓவியம் :திரு.ஜீவா தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த…

புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால் கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே நன்னிலைதான் சேரும் நமக்கு. பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப்…

என்முன் வருகிற காலங்களை இன்னும் திடமாய் எதிர்கொள்வேன் பொன்னினும் விலைமிகு பொருளென்றே பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன் இன்னமும் செய்ய ஏராளம் என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன் இன்னொரு மனிதரை எண்ணாமல் என்னை நானே ஜெயித்திருப்பேன் எவர்க்கும்…

சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும் எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும் வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும் ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம் சூர்ய…

ஆடும் திருவடி தெரிகிறது ஆனந்தம் அலைபோல் எழுகிறது பாடும் திருமுறை ஒலிக்கிறது பரமனின் திருவருள் இனிக்கிறது ராவணன் தோள்களில் பதிந்தபதம் ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம் ஆரூர் வீதியில் நடந்த பதம் ஆடிய பாதமே சாசுவதம் தீயென எழுந்தது திருமேனி தாமரைப் பதந்தனில் இவன்தேனீ தாயென்றும் வருவான் சிவஞானி தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ காலனை…

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி. http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது) பல்லவி தண்ணீரே தண்ணீரே பூமியின் உயிரே நீதானே மண்ணோடும் விண்ணோடும் ஆள்கிற அழகே நீதானே தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே தீர்த்தமென்று தேடிவந்து உன்னில்…

(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன். அதைத் தமிழில் எழுத முயன்றேன்) பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே சாம்பசிவன்தலையிலேஏறும்…

சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய…

அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம் சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள். அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர் காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல. சிவனும்தான். பேய்வடிவெடுத்து…