எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள், அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம்…

எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல் கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல் கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்: நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள் நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய் அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்; புடவைக்குள்…

பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல் உன்னைத் தேடி உன்குரு வருவார் தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின் இன்னும் தேட எதுவும் இல்லையே   நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில் மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை…

ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி…

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை எல்லோரும் சுமப்பதில்லை பாரு நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே நீளுதடி நீளுதடி வாழ்வு ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது அத்தனையும் வெத்துப்பனி மூட்டம் பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம் மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு…

சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான் சிரத்தையில்லாமல் நடக்கின்றேன் உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான் ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன் கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என் கண்களில் பட்டிடப் போவதில்லை பலமுறை வருடிய ஓடங்களை-நான் பார்த்தினி ஏதும் ஆவதில்லை…

தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய் பேரறியாத நிறங்களினுலகில் என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்? ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன் மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில் என்னுள் எழுந்த நிலவை என்செய? வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி…

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி…

பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும்…

காரியம் தொடங்கிட கணபதி-இங்கு காலத்தின் அதிபதி கணபதி சூரிய உதயம் கணபதி-திரி சூலியின் மடியில் கணபதி ஓமெனும் வடிவம் கணபதி-நாம் ஓதிடும் மந்திரம் கணபதி பூமியில் எதுவும் கணபதி-நல்ல பூசனைப் பிரியன் கணபதி மூலைக்கு…