Blog

/Blog

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம் எங்கே? கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின் குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே? என்னென்ன தொழிற்கூடங்கள் எத்தனை கல்விச் சாலை பொன்பொருள் வாரித் தந்த பெற்றிக்கோ எல்லை இல்லை மன்னர்க்கும் மன்னராக மண்மிசை ஒருவர் வாழ்ந்தார் அன்னவர் அருட்செல் வர்தான் அவருக்கு நிகரே இல்லை வித்தகத் தலைவர் போனார் வள்ளலே போனார் – அந்தோ புத்தகப் பிரியர் போனார் ...

உன் பேர் எழுதட்டும்

சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன? எப்போ?” என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார் “சேதி தெரியுமா” என்றவரும் சேர்த்துப் பரப்பிய கதையெல்லாம் காதில் வந்து விழும்முன்னே களத்தில் இறங்கி நடந்திருப்பேன் மீதி வெற்றிகள் எதையும்நான் மறந்தும் வெளியே சொல்வதில்லை நீதி இதிலே உண்டென நான் நீட்டி முழக்கவும் போவதில்லை நம்மைப் பற்றிப் பேசுபவர் நாக்குச் சுகத்தில் ...

ஆண்டினை ஆளுங்கள்

புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள் உழைப்பை பரிசளித்து உயர்வுகள் ஆயிரம் பெற்றிடுங்கள் உங்கள் நம்பிக்கை பரிசளித்து உலகத்தின் பார்வையில் பட்டிடுங்கள் உங்கள் நேரத்தைப் பரிசளித்து உன்னத பலன்கள் ஈட்டிடுங்கள் உங்கள் இலட்சியம் தொடுவதற்கு உங்களை முழுதாய் கொடுத்திடுங்கள் வந்துவிட்டோம் பூமிக்கு வழங்க வேண்டும் எதையேனும் தந்தனர் பலரும் ...

நீயே நினை…….

உன்னுடைய பீடத்தை நீயே அமை; உன்னுடைய வேதத்தை நீயே சமை; உன்வலிமை உன்சிறுமை நீயே நினை; உன்கனவு மெய்ப்பட நீயே துணை; பொன்னுரசிப் பார்க்கையிலேபுரியுமதன் தரம் மின்னுரசி மழைபொழிய மண்ணெல்லாம் வளம் உன்னைவிதி உரசுகையில் உணர்த்திடு உன பலம் உன்னைநீ உணருவதே உனக்கென்றும் நலம் கல்லுக்குள் சிலையிருக்கும்; கண்டறியும் உளி நெல்லுக்குள் மணியிருக்கும்; நீக்கிடுக பசி சொல்லுக்குள் பொருளிருக்கும்; உணர்ந்தவர்க்கே ஒளி எல்லையில்லா உன்பெருமை எட்டுவதே வழி விலலிலிருந்து அம்பொன்று விடைபெறலே விதி எல்லாமும் இடம்பெயரும் இவ்வுண்மை ...

விட வேண்டாம்

பெய்யும் பனியை வெயில் தின்னும் படர்கிற கோடையை மழைதின்னும் செய்கிற பணியை காலம் தின்ன சிறிதும் வாய்ப்பு தர வேண்டாம் தூண்டில் புழுவை மீன்தின்னும் துடிக்கும் மீனை நாம் தின்போம் நீண்ட கனவை தயக்கம் தின்ன நிச்சயம் வாய்ப்பு தரவேண்டாம் மண்ணின் சத்தை மரம்தின்னும் மரம்விழுந்தாலோ மண்தின்னும் எண்ணிய வெற்றியை எந்த எதிர்ப்பும் எடுத்துத் தின்ன விடவேண்டாம் கவிழ்கிற இருளோ பகல்தின்னும் கதிரவன் எழுந்து இருள்தின்னும் தவமாய் வளர்த்த கனவை அச்சம் தாவித் தின்ன விடவேண்டாம் ...
குருவெனும் முழுநிலவு

குருவெனும் முழுநிலவு

குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது சுகங்களில் உடல்பழுது சுமைகளில் மனம் பழுது சகலமும் சுகம்பெறுமே சத்குரு வரும்பொழுது புன்னகை நந்தவனம் புனிதனின் குளிர்வதனம் என்மனம் கரைந்துவிடும் இறையவன் முன்னழுது தென்றலின் இதமிதுவா தெய்வத்தின் குரலிதுவா மன்னவன் குருநாதன் மன்றத்தில் வரும்பொழுது விண்மதி பொலிந்திருக்க விரல்களும் குவிந்திருக்க கண்களும் ...
More...More...More...More...