Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் —————————————————————– பால்போன்றதுதான் உயிர் .அதில்விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து.மரணம் மட்டுமல்ல.மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது “”மத்துறு தயிரென வந்து சென்றிடைத் தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான். குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும்.ஆனால் உயிராகிய தயிர் கடையப்படுகிறபோது புலன்களில் நெருப்புப் ...

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை! திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி.மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராமவல்லியின் திருமுலைகள் செப்புக்கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன. சைவசித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம்அவளுடையது.மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளேஅதிபதி.கடலின் அலைகள் சலசலக்கின்றன.நடுக்கடல் சலனமில்லாமல் இருக்கிறது. சலனம் கடந்த மனவுறுதியை தியானத்தினாலோ ஞானத்தினாலோ அருள்பவள் மனோன்மணி. அவள் ஆற்றிய காரியம் ...

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பது கூட ஐயமே.ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன.காணாதன காண்கிறார்கள்.காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள். ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார்,”ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையதென்று பிடிபடுகிறது.அந்த மனத்திலிருந்து என்ன வெளிவரும்என்று தெரியுமாதலால் அதை முழுவதும் படிக்காமலேயே அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்து ...

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

3.விரலருகாய்….வெகுதொலைவாய்... அம்பிகைமீது அன்புச் சகோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்…உன்னை  வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்”. சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது.வாழ்வில் மனிதனுக்கு எத்தனையோ துணைகள். பயணங்களில் கிடைக்கும் வழித்துணை ,இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை. இவற்றில் பல வழியிலேயே போகும்.சில வந்தவுடன் போகும்.சிலவோ போகவென்றே வரும். ஆனால் அம்பிகை நிலையான துணையாய் நிரந்தரப் பற்றுக்கோடாய் பக்கத்திலேயே இருக்கிறாள்.”துணையும்” என்கிறார் அபிராமி பட்டர். பெரும்பாலும் ...

அபிராமி அந்தாதி -வாழ்வில் நிரம்பும் வசந்தம்

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன.தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் திட்டம். என் நினைவு சரியாக இருக்குமேயானால் தை அமாவாசையில் அநத விழா திட்டமிடப்பட்டிருந்தது. அந்த மாவட்டங்களில் நிகழ்ந்தசிலவகை இனக்கலவரங்கள் காரணமாக ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

( அபிராமி அந்தாதி நூலுக்கு என் விளக்கவுரை, ” அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அந்நூலின் சில பகுதிகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்)      1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில்,ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும்தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும்.மற்றவற்றை விட்டு  சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை.அவற்றில்   ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்…        “சின்னஞ்சிறு பெண்போலே         சிற்றாடை இடையுடுத்தி         சிவகங்கைக் குளத்தருகே         ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்” முன்பின் ...
More...More...More...More...