Blog

/Blog

சிவவாக்கியர் 1

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்) ஆன்மீகப் பாதையில் முன்னேறும்போது சில சக்திகள் திறமைகள் கைகூடும்.அவற்றை சித்திகள் என்பார்கள்.சிலர் அந்த சக்திகளிலேயே தேங்கிப் போய் விடுவதுண்டு.அவர்கள் சித்து வேலை செய்பவர்கள் என்னும் பெயரைப் பெறுகிறார்கள்.ஆனால் அந்த சித்திகளையும் கடந்து போகிறவர்கள் சித்தர்கள். அவர்கள் ஆன்மீகப் பாதையில் ஆகச்சிறந்த வைராக்கியத்துடன் வளர்ந்தவர்கள்.தம் ...

வெள்ளியங்கிரி ஆண்டவ்ர் திருப்பள்ளியெழுச்சி

வெள்ளிமலை காண்கின்ற விருப்பமுடன் செங்கதிரும் எழுகின்றதே புள்ளினங்கள்இசைபாடப்பொன்காலைப் பொழுதொன்று புலர்கின்றதே உள்ளமெலாம் நெக்குருக உமைபாகா உன்வாசல் தேடிவந்தோம் வெள்ளியங்கிரி ஆளும் வேதாசலா பள்ளி எழுந்தருளாயே தென்கைலா யமென்னும் வெள்ளியங்கிரி ஆளும் தேவதேவா உன்பாதம் சரணென்னும் அடியார்கள் முகங்காண நீயும்வாவா வெண்மேகம் அலைபாயும் மலையேறி வருகின்றோம்எங்கள்நாதா இன்னமுதே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே சித்தர்களும் யோகிகளும் சிவஞான முனிவர்களும் சேர்ந்துநாளும் பத்தியுடன் தொழுதேத்தும் பரமேசா இளங்காலை புலர்கின்றதே முத்திதரும் அருளாளா மூலமென நிற்கின்ற ஆதிமூர்த்தி வித்தகனே வெள்ளியங்கிரிநாதா பள்ளி எழுந்தருளாயே ...

எது? எது? எது?

எது உங்கள் பாத்திரம்? எதிர்மறை நேர்மறை போட்டி எப்போதும் இருக்கிறது.”எனக்கு நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும் என்னைச்சுற்றி இருப்பவர்கள்எதிர்மறை அதிர்வுகளுடன் இருக்கிறார்களே”என்கிற கேள்வியை எத்தனையோ பேர் எழுப்புவதுண்டு. உங்கள் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு திடமாக இருக்கின்றன என்பதைப் பயிற்சி செய்து பார்க்கும் வாய்ப்புதான் இந்தச் சூழல். மற்றவர்கள் எதிர்மறை அதிர்வுகளுடன் இருப்பதை மாற்றுவது என்பது நீண்டகாலத் தீர்வு.எதிர்மறை அதிர்வுகள் உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்வதே உடனடித் தீர்வு. எத்தகைய சூழல்களில்,எத்தகைய மனிதர்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே உங்கள் தாங்கும் ...

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 3

“சுபரமண்யா சுப்ரமண்யா சற்றே பாரப்பா ஒப்பில்லாத தவசீலா நடந்ததைக் கேளப்பா” உற்றவர் அழுததில் மெல்ல விழித்ததும் ஊரார் கதைசொன்னார் கொற்றவன் வந்ததை கேள்வியும் கேட்டதை ஒவ்வொன்றாய் சொன்னார் முற்றிய தவத்தில் கனிந்தவர் மெதுவாய் முறுவல் செய்தாராம் சக்தியின் லீலை நடப்பதை உணர்ந்தவர் திருமுகம் மலர்ந்தாராம் “ஆவது ஆகட்டும் அன்னையின் ஆணை ஏதென நானறியேன் வாழ்வின் பொருளை விளங்கிடச் செய்யும் வித்தகம் நானறியேன் பவுர்ணமி போலப் பொன்முகம் காட்டிய காரணம் நானறியேன் கணமும் கணமும் அவளது திருமுகம் வேறொன்றும் ...

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 2

அருளே வடிவாம் அபிராமிக்கு அர்ச்சனை செய்யும் மரபினிலே அமிர்தலிங்கரின் மகனாய் உதித்தார் சுப்ரமணியனும் உலகினிலே மருளைத் துடைக்கும் மாதவச் செல்வி மலரடி தனிலே மனதுவைத்தார் இரவும் பகலும் அம்பிகை வடிவை இதயத்தில் பதித்தே தவமிருந்தார்… “ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி ...

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 1

விநாயகர் வாழ்த்து (தொகையறா) தொடரும் துணையாய் துலங்கும் பூரணம் இடர்கள் களையும் ஏக நாயகம் கடலின் அமுதம் கவரும் சாகசம் கடவூர் வாழும் கள்ள வாரணம்-திருக் கடவூர் வாழும் கள்ள வாரணம் கள்ள வாரணம்…. பல்லவி காக்கும் விநாயகன் கழலிணை சரணம் ஆக்கும் பனுவலில் அவன் பதம் பதியும் நோக்கும் வேளையில் நம்வினை அகலும் ஏக்கம்..போக்கும்…. இணையடி சரணம்…… சரணம் ஆதிகடவூர் அமர்ந்தவனாம்-எங்கள் அமுதகடேசன் திருமைந்தன் நீதி நிலைபெற வருபவனாம்-எங்கள் நெஞ்சில் நிறையும் கணநாதன் ஜோதி வடிவாம் ...
More...More...More...More...