Blog

/Blog

மார்கழி – மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்

திருமாலுக்கும் நான்முகனுக்கும் சிவபெருமானை நேரில் பார்த்து ஆக வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உண்டு. கயிலாயத்திற்குப் போகும் போதெல்லாம் அவர் இருந்தால் தானே! 64 திருவிளையாடல்கள் செய்ய ஓயாமல் மதுரைக்குப் போவது, நாயன்மார்கள் அறுபத்து மூவரை ஆட்கொள்ள அடிக்கடி கிளம்பிப் போவது, சித்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, பக்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, இதே வேலைதான் சிவபெருமானுக்கு. கயிலாயத்திற்கு அடிக்கடி சென்று பார்த்து ஏமாந்து திரும்புவதே வழக்கமாகிவிட்ட திருமாலுக்கும் நான்முகனுக்கும், “நாமும் பூமியிலேயே பிறந்திருக்கலாமோ” என்று தோன்றிவிட்டது. அதுவும் ...

மார்கழி 29 பூமிக்கு வரச்செய்த புண்ணியன்

இறைவன் தன் அடியவர்களை நெருங்கி வர அனுமதிக்கும் இடம் பூமிதான்.வானகத்தில் தேவர்களுக்குஅவனை நெருங்கக் கூட துணிவு கிடையாது. தன் அடியார்களுடன் தான் நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகவே அவர்களை மண்ணில் வந்து வாழச் செய்தானாம் சிவபெருமான்.”பாரில் நின்னை சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே” என்கிறார் அபிராமி பட்டர். அவனுடைய அருளின் வள்ளன்மை திருப்பெருந்துறையில் காட்சி தந்த கருணையில் வெளிப்படுகிறது. அடியவர்கள் கண்களில் இனித்து களிப்பு தருகிற தேனாக இருக்கிறான். கடலில் கடைந்த அமுதாய் கரும்பாய் அடியாரின் எண்ணத்தில் ...

மார்கழி 28 குருவாக வந்த சிவன்

மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார். இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு காட்டியதையும் நினைந்து உருகுகிறார் மாணிக்கவாசகர் முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் ...

மார்கழி 27_கருணைக்கென்ன கைம்மாறு?

தேவர்கள் அமுதத்தை அறிந்தவர்கள். அதன் சுவையை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு பழத்தின் சுவையை அறிந்தவர்களில்லை என எள்ளல் தொனிபடப் பாடுகிறார் மாணிக்கவாசகர். எந்தப் பழம் அது? திருமூலர் சொன்ன பழம்தான். ”ஒன்று கண்டீர் இவ்வுலகுக்கொரு கனி நன்று கண்டீர் அது நமசிவாயக் கனி மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும் தின்று கண்டால் அது தித்திக்கும் தானே” என்றார் திருமூலர். சிவக்கனி எவ்வளவு அருமையானது,எவ்வளவு சுவையானது என்பதையோ, சிவனின் திருவுரு எத்தகையது என்பதையோ தேவர்களும் அறிய மாட்டார்கள். ...

மார்கழி 26-தேடலின் உறுதி

தேர்வில் வெல்ல விரும்பும் மாணவர்களைப் பாருங்கள்.பொழுது போக்குகள்,கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் படிப்பிலேயே கவனமாயிருப்பார்கள். இவர்களே இப்படியென்றால் முக்தியை நினைக்கும் அடியார்கள் எப்படி இருப்பார்கள்? “பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்” என்கிறார் மாணிக்கவாசகர். “பப்பற” என்றால் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்று பொருள். அவர்கள், ஒரு பெண் தன்காதலன் மேல் எவ்வளவு அர்ப்பணிப்புணர்வுடனிருப்பாளோ அது போன்ற இயல்பில் இருக்கிறார்கள்.அவ்வளவு தீவிரமாக இறைத்தேடலை வகுத்துக் கொண்டவர்கள் போல் தவமோ உறுதியோ இல்லையென்றாலும்,என் பிறவி நோயை அறுத்து ஆட்கொள்ளும் பெருமானே ...

மார்கழி 25-தகுதி வேண்டாத பதவி

சிற்சில பதவிகளுக்கென்று சில தகுதிகள் உண்டு.ஆனால் முன் தகுதி எதுவுமே இன்றி இருந்தாலும் பக்தி இருந்தால் இறைவனுடைய கருணை ஆட்கொண்டு விடுகிறது.”சிவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்து நிற்கிறான்.அவன் எங்கும் இருப்பவன் என்பதால் செல்வதோ வருவதோ இல்லை’ என்பதை பாடல்களாகக் கேட்டதன்றி இறைவனைக் கண்டறிந்தவர் பற்றிக் கேட்டறியக்கூட இல்லை. தகுதிகள் இவ்வளவு குறைவாய் இருப்பினும் மிகுதியான கருணை கொன்ட இறைவன், தம்மை அறிந்தவர்களைக் கூட அறியாதார் முன்பு தாமாக வெளிப்பட்டு ,அவர்தம் குறைகளைக் களைந்து தாமாக ஆட்கொள்கிறான் எனில் ...
More...More...More...More...