(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்) நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம்…

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து …

கர்ணன்-6

February 11, 2011 1

 பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க பாரத யுத்தம் தொடங்கியது பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட குருஷேத்திரமே கலங்கியது அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட சல்லியன் கர்ணனின் சாரதியாம் கர்ணனை இகழும் சல்லியனாலே இருவருக்கிடையே மோதல்களாம்…

கர்ணன்-5

February 10, 2011 0

    பாரத யுத்தம் நெருங்கிடும் நேரம் பாண்டவர் தூதன் பரந்தாமன் மாபெரும் கலகம் செய்திட வந்தான் மாதவன் கேசவன் யதுபாலன்   குந்தியின் அரண்மனை சென்றவன் அவளது கடந்த காலத்தைத் தோண்டிவிட்டான் அன்றவள்…

கர்ணன்-4

February 7, 2011 0

கிழக்கில் கதிரவன் உதிக்கையில் மகனாம் கர்ணன் துதிப்பான் உவகையிலே நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் கண்ணதாசன் கவிதையிலே (ஆயிரம் கைகள் நீட்டி-பாடல்) சூரிய வணக்கம் செய்கிற வேளையில் குரலொன்று கேட்டது வாசலிலே காரியம் ஒன்று…

கர்ணன்-3

February 6, 2011 0

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன் பணிந்தே கர்ணன் நிற்கின்றான் சக்தியின் களஞ்சியம் பரசுராமனின் குருகுலம் தனிலே கற்கின்றான் தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில் தாங்க முடியாக் கோபத்திலே அந்தணருக்கே வில்வித்தை போதனை பரசுராமனின் கூடத்திலே…

கர்ணன்-2

February 5, 2011 0

பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும் போதனை வழங்கும் ராஜகுரு ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர் வில்வித்தை தனிலே வீரகுரு பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன பயின்ற வில்வித்தை அரங்கேற்றம் நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர் எங்கும்…

கர்ணன்-1

February 4, 2011 1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..      …

அவள்தான்

February 3, 2011 1

 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப் பாதையைத் தந்தவள் அவள்தான் தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே தெரிகிற ஜோதியும் அவள்தான் வீணையை மீட்டிடும் விரலாய்-என் விதியினை ஓட்டிடும் குரலாய் காணென்று காட்டிடும் அருளாய்-என் கண்முன்னே வருபவள் அவள்தான்…

காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன நனவாகும் நமதுகனா என்றிருந்தன சாமமாகும் போதுகூட விழித்திருந்தன சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான் ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான் பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான் புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான் தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன…