உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக கவிஞர்…

ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்.. சீரியல் பேரு என்னங்க? அது இன்னும்…

ஜாலங்காட்டி நடக்குது ஜன நாயக சமையல்-பல காய்கறிகள் கலந்துபோட்டு கூட்டணி அவியல் கேழ்வரகின் நெய்பிசைந்து கசகச துகையல் கடுகுபோல படபடக்கும் கோபத்தின் பொரியல் உப்புபோலத் தொட்டுக்கிட ஜாதி ஒழிப்பு-அட ஊறுகாயப் போல்பழசு ஊழல் ஒழிப்பு…

சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது…

சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர் திரு.ஆ.மாதவன். ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு…

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு…

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், “கவிஞர்கள் பார்வையில் இராசராசன் ‘என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை. தலைமை :இசைக்கவி ரமணன். சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க…

சின்னஞ் சிறியவளை-ஒளிச் சுடராய்த் தெரிபவளை பென்னம் பெரியவனின்-இடப் பாகம் அமர்பவளை மின்னல் கொடியழகை-உண்ணா முலையாம் வடிவழகை உன்னும் பொழுதிலெலாம்-அவள் உள்ளே மலருகிறாள் கன்னங் கரியவளை-அருட் கனலாய் ஒளிர்பவளை இன்னும் புதியவளை-கண்கள் இமையா திருப்பவளை பொன்னில்…

19.07.2009 ல் ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளை ஏற்பாட்டில கவியரங்கம். “போனவர்கள் வந்தால்?” என்பது பொதுத்தலைப்பு. எனக்கான தலைப்பு :நேருபிரான். கவியரங்கத்தலைமை : “நாவுக்கரசர்” நெல்லை கண்ணன் அவர்கள். மண்ணைவிட்டுப் போய்விட்ட தலைவர் தம்மை மகத்துவத்தால் புகழ்படைத்த…

கோலாலம்பூரில் கண்ணதாசன் அறவாரியம் நிகழ்த்திய கம்பன் விழாவில் , “பேசாதன பேசினால்”என்ற தலைப்பில்,கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.”சூடாமணி பேசினால்” என்பது எனக்களிக்கப்பட்ட கிளைத்தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் வாசித்த கவிதை இது: சூடாமணி…