போர்க் களத்திற்குப் போகும்போது
கத்தியைப் போலவே கவசமும் முக்கியம்.
ஒருதுளி கூட இரக்கமில்லாமல்
உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும்,
காயம் செய்யும் கொள்கையில்லாமல்
குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம்.
மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும்
யுத்தம் எவனின் புத்தியில் வந்தது?
போர்க்களம் நடுவில் போதித் தாவது
மூர்க்கக் கனலை மூட்டிட வேண்டுமா?
கூரிய கத்தியாய் இருப்பதைக் காட்டிலும்
இறுகிய கவசமாய் இருக்குமென் கவிதை.
கொண்டுவந்திருக்கும் வெள்ளைக் கொடியைக்
காற்றில் அசைத்துக் காட்டி நிற்கலாம்
குருதித் துளிகள் பட்டுப்பட்டு…
கொடியின் வண்ணம் சிகப்பாகும் வரை!
முழுவதும் சிவந்து மண்ணில் விழும்முன்
வேறொரு வெண்கொடி வந்தே தீரும்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *