சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய்

குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன்.
மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய்
தோழமையோடு தழுவிக் கொள்கிறேன்.
இறுக்கமான என் இயல்புகள் விட்டு
நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன்.
கணக்குகள் நிறைந்த வணிக உலகிலும்
வருத்தமில்லாமல் விட்டுக் கொடுக்கிறேன்.
பகையோ பொறாமையோ தலையெடுக்காத
போட்டிகளில் மட்டும் பங்கு பெறுகிறேன்.
நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு நாளும்
நெகிழ்ச்சிக்கு நிறைய நேரம் தருகிறேன்.
இருந்தபோதிலும் எப்படி யாவது
எதிரிகள் ஒருசிலர் ஏற்படுகிறார்கள்…
பழகி வருபவர் பட்டியிலிருந்தே…

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *