வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா? நீங்கள் தான்!!

உங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப் பாதிக்காது.

நம்மிடம் குறையே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களைதான் விமர்சனங்கள் பாதிக்கும்.

உங்கள் குறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதல் நன்மை, உங்கள் குறைகளைச் சீர்செய்து, அவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

இரண்டாவது நன்மை, வேறு யாராவது உங்களைப் பற்றி குறைசொன்னால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளப் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று ஆர்வமுடன் தேடுவீர்கள்.

அப்புறம்தான் ஓர் உண்மை தெரியும். சுய விமர்சனம் சரியாயிருந்தால், அதற்குப் பெயர்தான் சுயதரிசனம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *