வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன.

வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம் செய்துகொண்டு ஒரு நிலைலேயே நின்று போகின்றன.

தன்னுடைய வலையை பின்னிய பிறகு சிலந்தியால் எங்கும் நகர முடிவதில்லை. தான் பின்னிய வலையில் தானே சிறையாகும் சோகம் சிலந்திக்கு. ஆனால் அது சோகம் என்றுகூட அதற்குத் தெரிவதில்லை.

வாய்ப்புகளைத் தேடி வெளியே போகிறவர்களுக்கு வானம்கூட எல்லை இல்லை. பல்லாயிரம் அடிகள் உயரத்தில் பறக்கும் பறவையின் அலகுக்கு மொத்த உலகமும் இலக்கு. ஆனால் சிலந்திக்கு…?

உங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், உங்களைப் பற்றி நீங்களே உருவாக்கிய தாழ்வான அனுமானங்கள், அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை குணம் போன்றவற்றால் உங்களை நீங்களே குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் வேட்டையாட வசதியாய் உலகம் விரிந்து கிடக்கிறது. சொந்த வலைக்குள் சோம்பல் வலைக்குள் நீங்களே இரையாகாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *